செய்திகள்
தற்கொலை

நாசரேத் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

Published On 2020-02-14 14:50 GMT   |   Update On 2020-02-14 14:50 GMT
நாசரேத் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75), பூ வியாபாரி.  இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் முடிந்திருந்தது. அவர்கள் இறந்துவிட்டனர். இதனால் ஆறுமுகம் 3-வதாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார்.  இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் இறந்துவிட்டார் என்ற தகவலின் பேரில் அவர் சென்னை சென்றார்.  

இந்நிலையில் தனியாக இருந்த ஆறுமுகம் மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாசரேத் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News