செய்திகள்
சிவன்

மகா சிவராத்திரி: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

Published On 2020-02-14 02:57 GMT   |   Update On 2020-02-14 02:57 GMT
மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:

மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நெல்லை(வண்டி எண்: 82603) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி இரவு 8.50 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நெல்லை-தாம்பரம்(82604) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News