செய்திகள்
கோப்பு படம்

கபிஸ்தலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2020-02-13 11:39 GMT   |   Update On 2020-02-13 11:39 GMT
கபிஸ்தலம் காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கபிஸ்தலம்:

பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி. நந்தகோபால், உத்தரவின்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன், மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளி வந்த 9 மாட்டு வண்டிகளை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் எந்த மாட்டு வண்டிக்கும் அரசு அனுமதி இல்லை என்பது தெரியவந்தது.

9 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து மாட்டுவண்டிகள் ஓட்டி வந்த கங்காதாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த (வயது 47), சின்னதுரை (36), ஜீவா (19), கரும்பாயிரம் (38), முருகதாஸ் (38), வடிவேல் (39), சங்கர்(40), சேதுராமன்(49), ஆகிய 9 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News