செய்திகள்
போலீசில் தஞ்சம் அடைந்த சசிகுமார்- வினோதினி.

கண்ணமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை கரம் பிடித்த நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம்

Published On 2020-02-13 11:21 GMT   |   Update On 2020-02-13 11:21 GMT
கண்ணமங்கலம் அருகே பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்ததால் ஆட்டோ டிரைவரை கரம் பிடித்த நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம் அடைந்தார்.

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள படவேடு ராமநாதபுரம் கூட்ரோடு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (42). இவரது மகள் விநோதினி (19) என்பவர் கேளூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

கடந்த 8-ம் தேதி காலை கல்லூரி சென்ற வினோதினி, மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் வினோதினி தந்தை ராஜேந்திரன் சந்தவாசல் போலீசில் புகார் செய்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி,சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநோதினியை தேடி வந்தனர். 

இந்த நிலையில் வினோதினி (19), தனது உறவினர் மகன் சசிகுமார் (24) என்பவரை திருமணம் செய்து கொண்டு, நேற்று கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி முன்னிலையில் தஞ்சமடைந்தார்.

தொடர்ந்து இருகுடும்பத்தினருடமும் சமரசம் செய்து விநோதினியை, அவரது கணவர் சசிகுமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

வினோதினி கல்லூரி செல்லும்போது சசிகுமாரின், ஆட்டோவில் தினமும் செல்லும்போது காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் விநோதினிக்கு, அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதனால் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.  என போலீசில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News