செய்திகள்
செல்போன் பறிப்பு

கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காததால் செல்போன் பறிப்பு

Published On 2020-02-12 09:41 GMT   |   Update On 2020-02-12 09:41 GMT
கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காததால் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாநகர்:

கீழ்ப்பாக்கம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(20). இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களாக அண்ணா நகர் பகுதியில் கஞ்சா வாங்கி வந்துள்ளார்.

நேற்று இரவு ஸ்கைவாக் பாலம் அருகில் வாட்சா என்பவரிடம் நண்பர் விக்கியுடன் சென்று கஞ்சா வாங்கியுள்ளனர்.

பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திக்கிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை கஞ்சா வியாபாரி பறித்துக்கொண்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News