செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்கவில்லை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

Published On 2020-02-11 10:28 GMT   |   Update On 2020-02-11 10:28 GMT
திமுக தலைவர் முக ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி எஸ்.எஸ்.மகாலில் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழவந்தான் பேரூர் செயலாளர் கொரியர் கணேசன் தீர்மானங்களை வாசித்தார். பேரூர் செயலாளர் பாப்புரெட்டி வரவேற்றார்.

கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா எழுச்சியோடும் மறுமலர்ச்சியோடும் கொண்டாடப்பட வேண்டும். அவர் விட்டுச் சென்ற தொண்டினை முதல்வரும், துணைமுதல்வரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளிலே தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச தையல் எந்திரம், சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு கடனுதவியுடன்கூடிய மாவு அரைக்கும் எந்திரம் அஞ்சலகம் மூலமாக பொன்மகள் சிறுசேமிப்புதிட்டகணக்கு தொடங்கியும் கொடுத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கருணாநிதிக்குப்பின் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குள் உதயநிதியை முன்னிலை படுத்திட மு.க.ஸ்டாலின் ஆசைப்படுகிறார். இது கேலிகூத்தாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக், இளைஞரணி ஒன்றிய இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, முன்னாள் தொகுதி செயலாளர் சி.பி.ஆர். சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் துரை நடராஜன், காளிதாஸ், உங்குசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோணை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அலங்கை பேரூர் செயலாளர் அழகு ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News