செய்திகள்
கேஎஸ் அழகிரி

அச்சுறுத்தலுக்கு நடிகர் விஜய் அஞ்சக்கூடாது- கேஎஸ் அழகிரி

Published On 2020-02-06 13:35 GMT   |   Update On 2020-02-06 13:35 GMT
ஐடி. சோதனைபோன்ற அச்சுறுத்தலுக்கு நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஐடி. சோதனைபோன்ற அச்சுறுத்தலுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது. ஐடி சோதனைமூலம் விஜய் குரலை ஒடுக்கலாம் என பாஜக கருதுமேயானால் அது பகல் கனவாக முடியும். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்துவது அச்சுறுத்தும் நடவடிக்கையாக இருக்க வாய்ப்பு உள்ளது. 

வருமானவரி வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் சிஏஏவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினி பேசியுள்ளார். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என எவரும் கூறிவிட முடியாது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News