செய்திகள்
கோப்பு படம்

காரிமங்கலம் அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் - சிமெண்ட் கடைக்காரர் பலி

Published On 2020-02-01 16:14 GMT   |   Update On 2020-02-01 16:14 GMT
காரிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிமெண்ட் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் காரிமங்கலத்தில் சிமெண்டு கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் காரிமங்கலத்தில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

காட்டு சீகலஅள்ளி பிரிவு சாலை அருகில் ெசன்றபோது பின்னால் வந்த கார், மோட்டார்ைசக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இ்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News