செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை

Published On 2020-01-29 18:02 GMT   |   Update On 2020-01-29 18:02 GMT
கரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:

கரூர் அருகே உள்ள சிவியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவரது மகள் லோகாம்பாள் (24). இவர், திருக்காம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் லோகாம்பாள் கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக, அவர் சிகிச்சை மேற்கொண்டும், வலி குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 26-ந்தேதி வீட்டு அருகே, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லோகாம்பாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News