செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு - அரசாணைக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு

Published On 2020-01-29 17:05 GMT   |   Update On 2020-01-29 17:05 GMT
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்துள்ள மனுவில், 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான தமிழக அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
Tags:    

Similar News