செய்திகள்
கந்தம்பாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து வடமாநில பெண் பலி
கந்தம்பாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் பலியானார். ஆன்மிக பயணம் வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கந்தம்பாளையம்:
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் முகல் ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் (வயது 24). இவருடைய மனைவி சுரேகா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாய்பாபா பக்தர்களான இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி ஆட்டோவில் சாய்பாபா படத்தை வைத்து ஆன்மிக பயணமாக ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர். ஆட்டோவை நிலேஷ் ஓட்டினார்.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்புபாலம் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது கரட்டுபாளையம் பிரிவு ரோட்டில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் சுரேகா பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நிலேஷ் தந்தை ராம்தேவ் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்செங்கோடு-பரமத்தி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் முகல் ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் (வயது 24). இவருடைய மனைவி சுரேகா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாய்பாபா பக்தர்களான இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி ஆட்டோவில் சாய்பாபா படத்தை வைத்து ஆன்மிக பயணமாக ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர். ஆட்டோவை நிலேஷ் ஓட்டினார்.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்புபாலம் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது கரட்டுபாளையம் பிரிவு ரோட்டில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் சுரேகா பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நிலேஷ் தந்தை ராம்தேவ் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்செங்கோடு-பரமத்தி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.