செய்திகள்
தீ விபத்து

ஊத்துக்கோட்டையில் மரக்கடையில் தீ விபத்து

Published On 2020-01-28 08:15 GMT   |   Update On 2020-01-28 08:15 GMT
ஊத்துக்கோட்டையில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் ரோட்டில் செல்வகுமார் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் மரக் கடையில் திடீர் என்று தீப்பற்றியது.

காற்று பலமாக வீசியதால் கடை முழுவதும் தீ பரவியது. இரவில் கடையில் தூங்கிய தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர், சத்தியவேடு, தேர்வாய்கண்டிகை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், ரம்பங்கள், மரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News