செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்

Published On 2020-01-27 16:57 GMT   |   Update On 2020-01-27 16:57 GMT
திருமங்கலம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருமங்கலம்:

தமிழகமெங்கும் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் கட்டுமானம், பராமரிப்பு துறை சார்பில் கல்லுப்பட்டி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் மதுரை சாலையில் சாலை பாது காப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மாணவ- மாணவிகள் கோ‌ஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

பேரணி செல்லும் போது பஸ், ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டுனர் கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரம் கொடுத்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News