செய்திகள்
போச்சம்பள்ளி அருகே மினிவேன் மோதி மின்கம்பம் முறிந்தது
போச்சம்பள்ளி அருகே தண்ணீர் கேன் ஏற்றி கொண்டு சென்ற மினிவேன் எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து தொங்கியது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் புலியூர் பணியாளர் பங்களா அருகே நேற்று மாலை தண்ணீர் கேன் ஏற்றி கொண்டு மினிவேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்து மினிவேன் சாலையில் இருந்த மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின்கம்பம் முறிந்து தொங்கியது. மின்கம்பி தாழ்வாக தொங்கிய நிலையம் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மின் ஊழியர்கள் உடனடியாக வந்து மின் சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. அதிஷ்டவசமாக டிரைவருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.