செய்திகள்
விபத்து

கொடைரோட்டில் 5 பேர் பலியான இடத்தில் மீண்டும் விபத்து: கணவன்-மனைவி படுகாயம்

Published On 2020-01-27 14:12 GMT   |   Update On 2020-01-27 14:12 GMT
கொடைரோட்டில் 5 பேர் பலியான அதே இடத்தில் இன்று மீண்டும் நடந்த விபத்தில் கணவன்-மனைவி படுகாயமடைந்தனர்.
கொடைரோடு:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தை குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி (வயது 38). இவர் தனது   மனைவி தனலெட்சுமி (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். 

சடையாண்டிபுரம் பிரிவில் இவர்கள் வந்த போது பின்னால் வந்த கார் வேகமாக மோதியது. இதில் கணவன் மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அவர்கள் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே இடத்தில்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 வழிச்சாலையில் தடுப்புக்காக பேரிகார்டுகள் வைக்கும் போது அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் வளைவில் திரும்பி முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News