செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் அண்ணா

அண்ணா நினைவு நாள்- பிப்ரவரி 3ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

Published On 2020-01-27 07:41 GMT   |   Update On 2020-01-27 07:41 GMT
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 51-வது நினைவு நாள் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற உள்ளது. 



3-ம் தேதி காலை 7 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் இல்லம் அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு அண்ணா நினைவிடத்தை சென்றடையும். அங்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Tags:    

Similar News