செய்திகள்
கோப்பு படம்.

மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை: கைது செய்ய சென்ற இன்ஸ்பெக்டரை நாயை ஏவி விரட்டியதால் பரபரப்பு

Published On 2020-01-26 16:20 GMT   |   Update On 2020-01-26 16:20 GMT
வில்லிவாக்கத்தில் மகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை, இன்ஸ்பெக்டர் கைது செய்ய சென்றார். அப்போது நாயை ஏவி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர்:

வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் தேடுவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது கார் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் இன்ஸ் பெக்டர் உமாமகேஸ்வரி போலீசாருடன் அங்கு சென்றார்.

அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் இருந்த பிரகாஷை பிடிக்க படிக்கட்டு வழியாக சென்றனர். அப்போது பிரகாஷ் கீழ் தளத்தில் இருந்த வளர்ப்பு நாயை போலீசார் மீது ஏவி விட்டார். இதனால் போலீஸ்காரர்களை நாய் ஓட ஓட விரட்டியது.

இதையடுத்து பிரகாஷை கைது செய்ய முடியாமல் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் நாயை சமாளிக்க வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்களை உதவிக்கு அழைத்தனர்.

அவர்கள் 5 மணியளவில் நாயை சுருக்கு கயிறு போட்டு பிடித்தனர். நிம்மதி அடைந்த போலீசார் பிரகாஷை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News