செய்திகள்
குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டாம்- பிரதமர் மோடியின் சகோதரர் பேட்டி
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை யாரும் எதிர்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடியின் சகோதரர் கூறினார்.
ராமேசுவரம்:
பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி இன்று ராமேசுவரம் வந்தார். ராமநாத சாமியை தரிசனம் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தை அமாவாசையான இன்று ராமேசுவரம் ராமநாத சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தத்தை யாரும் எதிர்க்க வேண்டாம். அது நாட்டு மக்களுக்கு பயன்தரக் கூடியது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.