செய்திகள்
கைது

திருவண்ணாமலையில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2020-01-24 13:25 GMT   |   Update On 2020-01-24 13:25 GMT
திருவண்ணாமலையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நடுப்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் விநாயகமூர்த்தி ( 21) என்பவர் மிரட்டி  3 முறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்த சிறுமி தற்போது  5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விநாயகமூர்த்தியை போச்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News