செய்திகள்
கைது

தூத்துக்குடி-விளாத்திகுளத்தில் போக்சோ சட்டத்தில் வியாபாரி உள்பட 2 பேர் கைது

Published On 2020-01-24 10:48 GMT   |   Update On 2020-01-24 10:48 GMT
தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளத்தில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி:

விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும் வென்றான் சோழபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 72). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஜெகநாதனின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவர் ஜெகநாதனின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அவருக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெகநாதன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை கண்டுபிடித்த அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஜெகநாதனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் மோசஸ்(வயது 67). இவர் அப்பகுதியில் விறகு கடை மற்றும் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்த இளம்பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மோசஸை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News