செய்திகள்
தற்கொலை

கோவையில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-23 14:07 GMT   |   Update On 2020-01-23 14:07 GMT
கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை கவுண்டம் பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 27). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பத்மநாபன் மனவேதனையுடன் காணப்பட்டார். 

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் மணி(40). குடிபழக்கம் உண்டு. இதனால் இவரது மனைவி கோபித்து கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து மணி அங்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர்வரவில்லை. இதனால் மனம் உடைந்த மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News