செய்திகள்
ஆளுநர் மாளிகையில் நேதாஜி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தும் முக்கிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
இந்நிலையில், நேதாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்தைக்கு உயிர் கொடுத்தவர் என தெரிவித்தார்.