செய்திகள்
மாற்று கட்சியினர் ஆர்டி ராமச்சந்திரன் எம்எம்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த போது எடுத்த படம்.

பெரம்பலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

Published On 2020-01-22 14:49 GMT   |   Update On 2020-01-22 14:49 GMT
பெரம்பலூரில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தளி, எழும்பூர்,  பேரளி, வெண்மணி, அந்தியூர் ஆகிய ஊர்களில் இருந்து வி.சி.க, தி.மு.க, அ.ம.மு.க, ஐ.ஜே.க ஆகிய கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News