செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை குடமுழுக்கு பிப். 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-01-22 13:25 GMT   |   Update On 2020-01-22 13:45 GMT
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி பிப்ரவரி 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை:

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News