செய்திகள்
விஷம்

காட்டேரிக்குப்பத்தில் மனைவி கண்டித்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தற்கொலை

Published On 2020-01-22 12:06 GMT   |   Update On 2020-01-22 12:06 GMT
காட்டேரிக்குப்பத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கனூர்:

கடலூர் ரெட்டிச்சாவடி கீழ்அழிஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது55). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ராஜவேலுவுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்தது.

சம்பவத்தன்று ராஜவேலுவும், சிவகாமியும் காட்டேரிக்குப்பத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது ராஜவேலு மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி சிவகாமி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தமடைந்த ராஜவேலு பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்து விட்டார்.

இதனையறிந்த சிவகாமி அங்கிருந்தவர்கள் உதவியுடன் ராஜவேலுவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News