செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

ஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்

Published On 2020-01-22 11:31 GMT   |   Update On 2020-01-22 13:36 GMT
பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கான பதவியிடங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பதவியிடங்கள், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்கள் என 335 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும்.

தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News