செய்திகள்
நாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி
நாமக்கல்லில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்:
பெரம்பலூர் மாவட்டம் குடியமதன் கோபாலபுரத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 56). இவரது மகள் நந்தினி (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு சென்று கொண்டு இருந்தனர். காரை டிரைவர் ரமேஷ் (32) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த கார் நாமக்கல் - துறையூர் சாலை அண்ணாநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.
இதில் காரில் பயணம் செய்த வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நந்தினி, டிரைவர் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குடியமதன் கோபாலபுரத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 56). இவரது மகள் நந்தினி (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு சென்று கொண்டு இருந்தனர். காரை டிரைவர் ரமேஷ் (32) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த கார் நாமக்கல் - துறையூர் சாலை அண்ணாநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.
இதில் காரில் பயணம் செய்த வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நந்தினி, டிரைவர் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.