செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-01-21 10:26 GMT   |   Update On 2020-01-21 10:26 GMT
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் சிலம்பரசன் (வயது25). தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இவரது உறவினர் வீடு கட்ராம்பட்டியில் உள்ளது. அங்கு சிலம்பரசன் அடிக்கடி சென்று வருவார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கு சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

அவரது அத்துமீறல் எல்லை மீறவே மனமுடைந்த அந்த மாணவி இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சிவசக்தி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Tags:    

Similar News