செய்திகள்
டெங்கு காய்ச்சல்

பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2020-01-21 10:23 GMT   |   Update On 2020-01-21 10:23 GMT
பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியானதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ஆண்டாள். இவர்களுக்கு 2 மகள்கள். இவர்களில் இளைய மகள் தாரணி (10). வடுகப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

தாரணி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் தாரணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

பல்லடம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News