செய்திகள்
தற்கொலை

கே.கே.நகரில் திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

Published On 2020-01-21 09:55 GMT   |   Update On 2020-01-21 09:55 GMT
கே.கே.நகரில் திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போரூர்:

கே.கே.நகர், சங்கரீஸ்வரர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (44). தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் சகோதரருடன் வசித்து வந்தார்.

திருமணம் ஆகாததால் சந்திரசேகர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று இரவு மது போதையில் இருந்த சந்திரசேகர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News