செய்திகள்
கோப்பு படம்

கொளத்தூர் அருகே பள்ளி மாணவன் கடத்தல் - 2 வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2020-01-21 09:45 GMT   |   Update On 2020-01-21 09:45 GMT
கொளத்தூர் அருகே பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45). ரெயில்வே ஊழியர். இவரது மூத்த மகன் சஞ்சய் (14).

சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 6 மணிக்கு டியூசனுக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் நள்ளிரவில் ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அம்பத்தூர் சூரப்பட்டு அருகே சஞ்சய் அனாதையாக நின்றான். அவன் அந்த வழியாக சென்ற சிலரிடம் உதவி கேட்டான்.

இதைத் தொடர்ந்து அவனை ராஜமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்திய போது, டியூசன் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது தன்னை 2 பேர் கடத்தி மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றதாகவும், அப்போது மயக்க மருந்து கொடுத்ததில் தான் மயங்கி விட்டதாகவும் தெரிவித்தான்.

ஒரு வீட்டில் தன்னை அடைத்து வைத்திருந்தபோது அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் கூறினான்.

போலீஸ் உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி மாணவனை கடத்திய 2 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News