செய்திகள்
செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை
செல்லூரில் குடும்ப தகராறில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறையாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மணி (வயது 48). இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஆல்பர்ட் மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
செல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த ஆல்பர்ட் மணி, ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.