செய்திகள்
விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Published On 2020-01-20 06:24 GMT   |   Update On 2020-01-20 06:24 GMT
அரசுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கடந்த 2012 ம் ஆண்டு தேனி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக விஜயகாந்த் மீது அரசு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசியவை அவதூறானவையே. மேல்முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி விட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பதா? 

எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்நிலைகளை பற்றி விவாதிக்க இது இடமில்லை என தெரிவித்தனர். இதையெடுத்து அரசுக்கு எதிரான வழக்கை விஜயகாந்த் வாபஸ் பெற அனுமதி கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News