செய்திகள்
சாத்தான்குளம் அருகே முதியவர் தற்கொலை
சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள திருவரங்கநேரியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது65). இவரது மனைவி ஜெயசீலி. இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெபராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதில் கோபித்து கொண்டு ஜெயசீலி தனது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஜெபராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.