செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-01-19 10:11 GMT   |   Update On 2020-01-19 10:11 GMT
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் தலைமையில் தாமரை ஏரிக்கரை பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த முருகன் என்கிற இட்லி முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த ½ கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News