செய்திகள்
காதல் திருமணம் செய்த புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை
ஆரணி திருமணமான 5 மாதங்களில் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி:
ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 22), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19). இருவரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர்.
காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் நேற்று இரவு சந்திராவின் வீட்டு முன்பு புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தேவராஜிம், காயத்ரியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 22), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19). இருவரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர்.
காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் நேற்று இரவு சந்திராவின் வீட்டு முன்பு புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தேவராஜிம், காயத்ரியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.