செய்திகள்
திருவண்ணாமலையில் விஷம் குடித்து பெண் தற்கொலை
திருவண்ணாமலையில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தேனி மலைப் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி இந்திரா (வயது33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்திராவுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .
இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்திரா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.