அன்னூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை:
கோவை அன்னூர் ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 27). இவரது மனைவி சுகந்தி (23). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இருவரும் அன்னூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு சுகந்தி தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்ல கோவிந்தசாமியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவிரக்தியில் இருந்த சுகந்தி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்த சாமி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தார். ஆனால் அங்கு சுகந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.