செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்
திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அவதூறு கருத்துக்களை கூறி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் பெரியார் குறித்த தவறான புரிதலை இது உருவாக்கும். எனவே பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமில்லாத தகவலை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி வைரவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அவதூறு கருத்துக்களை கூறி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் பெரியார் குறித்த தவறான புரிதலை இது உருவாக்கும். எனவே பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமில்லாத தகவலை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி வைரவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.