செய்திகள்
மதுரை கமிஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்
பெரியாரை சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்ததாக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்ட பெரியார்-திராவிடர் கழக செயலாளர் மணிஅமுதன் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பேசியபோது ராமனை நிர்வாணமாக அழைத்து வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவு செய்துள்ளார். இது சமூகத்தில் பதட்டம் - வன்முறையை உருவாக்கும் வகையில் உள்ளது.
மறைந்த தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதும், இழிவுபடுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். எனவே நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவரை கைது செய்து தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட பெரியார்-திராவிடர் கழக செயலாளர் மணிஅமுதன் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பேசியபோது ராமனை நிர்வாணமாக அழைத்து வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவு செய்துள்ளார். இது சமூகத்தில் பதட்டம் - வன்முறையை உருவாக்கும் வகையில் உள்ளது.
மறைந்த தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதும், இழிவுபடுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். எனவே நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவரை கைது செய்து தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.