செய்திகள்
விபத்து

வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2020-01-17 10:46 GMT   |   Update On 2020-01-17 10:46 GMT
வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை வேடப்பட்டி அருகே உள்ள ராஜ் அவன்யூவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 49). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் கோவை- அவினாசி ரோட்டில் நீலாம்பூர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் செல்வக்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் குரும்பாபட்டியை சேர்ந்தவர் அருண்ராஜ் (25).

சம்பவத்தன்று அவர் கோவை-அவினாசி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அருண் ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கருமத்தப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News