செய்திகள்
இலத்தூர் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
இலத்தூர் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
இலத்தூர் அருகே உள்ள இடைகாலைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45)., விவசாய தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. பொங்கல் அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்ததால், அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இதில் மனம் உடைந்த ஜெயக்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.