செய்திகள்
தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-01-14 16:54 GMT   |   Update On 2020-01-14 16:54 GMT
நாமகிரிப்பேட்டை அருகே குடும்ப தகராறில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி செவ்வாப்பாடிபுதூரை சேர்ந்தவர் சுகனேஸ்வரன் (வயது 25). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சத்தியா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்றதில் இருந்தே கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சுகனேஸ்வரன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார். திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News