செய்திகள்
தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-14 08:22 GMT   |   Update On 2020-01-14 08:22 GMT
சங்கரன்கோவில் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முத்துமாரி(வயது 39). இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். முத்துமாரிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், சுற்றி திரிந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி காளியம்மாள் அவரை கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த முத்துமாரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News