செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தை பிறந்தால் வழி பிறக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2020-01-13 13:17 GMT   |   Update On 2020-01-13 13:17 GMT
தை மாதம் பிறக்க உள்ளதால், விரைவில் வழிபிறக்கும் என்று சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும். சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான். நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால், நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வென்றீர்களா?

திமுக பெறும் வெற்றிகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி இது. சிசிடிவி மட்டும் இல்லையென்றால் நாம் உள்ளாட்சித் தேர்தலில் இத்தனை வெற்றி பெற்றிருக்க முடியுமா? 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News