செய்திகள்
கோப்பு படம்

காதலியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட புதுவை பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் கைது

Published On 2020-01-11 13:37 GMT   |   Update On 2020-01-11 13:37 GMT
காதலியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதுவை பாஜக இளைஞரணி செயலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராக்பேட்ரிக். இவர் புதுவை மாநில பாரதிய ஜனதா இளைஞரணி செயலாளராக உள்ளார்.

இவருடைய உறவினர்கள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ளனர். அவர்களை சந்திக்க அடிக்கடி ராக்பேட்ரிக். சென்று வருவார். அப்போது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக தெரிகிறது.

அதையடுத்து ராக்பேட்ரிக். சமூகவலைதளத்தில் தனது உறவுக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் ராக்பேட்ரிக் மீது கர்நாடக சைபர் கிரைமில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கர்நாடக போலீசார் நேற்று புதுவை வந்தனர். அவர்கள் புதுவை போலீசாரின் உதவியுடன் சமூகவலைதளத்தில் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ராக் பேட்ரிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பா.ஜனதாவினரிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராக்பேட்ரிக்கை கர்நாடக போலீசார் பாதுகாப்புடன் கொண்டு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News