செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் 14 பவுன் பறிப்பு

Published On 2020-01-11 08:59 GMT   |   Update On 2020-01-11 08:59 GMT
மதுரையில் அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் 14 பவுன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பாசிங்காபுரம், விஷால் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42). இவர் சென்னையில் அறநிலையத்துறை அதிகாரியாக உள்ளார்.

ஊருக்கு வந்திருந்த மகேஸ்வரி (வயது 42) நேற்று இரவு மொபட்டில் வெளியே புறப்பட்டார். டி.பி. ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று மகேஸ்வரியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 14 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News