செய்திகள்
மழை

தமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு

Published On 2020-01-10 02:47 GMT   |   Update On 2020-01-10 02:47 GMT
தமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக நீலகிரியில் 64 சதவீதமும், ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் 45 சதவீதமும், தூத்துக்குடியில் 31 சதவீதமும், கோவையில் 29 சதவீதமும், புதுக்கோட்டையில் 27 சதவீதமும் பதிவாகி உள்ளது.



மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News