செய்திகள்
தர்பார் படத்தில் சசிகலா குறித்த வசனம் நீக்காவிட்டால் வழக்கு- வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்
தர்பார் படத்தில் சசிகலா குறித்த குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும் என சசிகலாவின் வக்கீல் கூறி உள்ளார்.
சென்னை:
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,
தர்பார் படத்தில் இருக்கும் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் அதன் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும் என கூறி உள்ளார்.