செய்திகள்
முதல்வர் பழனிசாமி

சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி- முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2020-01-09 13:21 GMT   |   Update On 2020-01-09 13:21 GMT
சென்னை நந்தனத்தில் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

சென்னை நந்தனத்தில் 43-வது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 21-ந்தேதி வரை சென்னையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. 

3, 000 சதுர அடியில் கீழடி கண்காட்சியும் மலர் சிற்பமாக வள்ளுவர் சிலையும் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். அதற்கான அனுமதி சீட்டு பள்ளி கல்லூரிகளில் தரப்படும். 

மாணவர்கள் அல்லாதோர் ரூ. 10 செலுத்தி அனுமதி சீட்டு பெற்று கண்காட்சியை பார்வையிடலாம் என பபாசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் , ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், கேபி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News